இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.-- வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவிப்பு
6 months ago

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூக ஆரோக்கியம் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வித்தியா குமாரிபேல் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இலங்கையில் கடந்த 2023 ஆண்டில் 694 எயிட்ஸ் நோயா ளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 15 சதவீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எயிட்ஸ் நோயினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கையில், எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் கையடக்கத் தொலைபேசி மற்றும் தொழில்னுட்ப வளர்ச்சி மூலம் உருவாகும் புதிய உறவு முறைகள் அதிகம் தாக்கம் செலுத்தியுள்ளன-என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
