போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்ட ஊர்.
இந்தத் தகவல்கள் அனைத்தும் நீதிமன்றில் முன்வைக்கப்படவுள்ளன.
அதன் பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அவர்களது சொத்துகள் அனைத்தும் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் பொலிஸார் மேலும் கூறினர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
