வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
3 months ago

வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பஸ்ஸைச் செலுத்தினார்.
அவ்வேளை சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்டபோது பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இதில் சைக்கிளில் பயணித்த 7வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
