வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
5 months ago

வவுனியா, பாவற்குளம் பகுதியில் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பஸ்ஸை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பஸ்ஸைச் செலுத்தினார்.
அவ்வேளை சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்டபோது பஸ்ஸூடன் மோதி விபத்துக்குள்ளானார்கள்.
இதில் சைக்கிளில் பயணித்த 7வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
