
பூமிக்கு அருகில் உள்ள புதன் கிரகத்தில் வைரம் அதிக அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக சீன மற்றும் பெல்ஜியம் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளன.
சூரிய குடும்பத்தில் முதலாவதாக உள்ள கிரகம் புதன். 3ஆவது இடத்தில் உள்ள பூமிக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், சீனா மற்றும் பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், புதன் கிரகத்தில் படிந்துள்ள வைரங்கள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
புதன் கிரகத்தில் மேற்பரப்பில் கார்பன், சிலிக்கா மற்றும் இரும்பு கலவை இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவற்றுக்கு அடியில் வைர அடுக்குகள் இருக்க வாய்ப்பு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதீத வெப்பநிலை மற்றும் அழுத்தம் காரணமாக தரைப் பரப்புக்கு கீழே உள்ள கார்பன், வைரக்கட்டிகளாக மாறியிருக்க வாய்ப்பு உள்ளது.
ஏராளமான வைரம் இருப்பதால் மனிதர்கள் புதன் கிரகத்துக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
