
இலங்கையில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள 9 நீர்த்தேக்கங்களில் 7, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் 7, பதுளை மாவட்டத்தில் உள்ள 7 நீர்த்தேக்கங்களில் 5, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களில் 2, ஹம்பாந்தோட்டை மாவட்டம் மற்றும் காலி மாவட்டத்தில் உள்ள 2 நீர்த்தேக்கங்களில் 1 நீர்த்தேக்கத்திலும் நீர் வழிந்து செல்வதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் உள்ள மூன்று நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 5, மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 பிரதான நீர்த்தேக்கங்களில் 2, பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 பிரதான நீர்த்தேக்கங்களில் 3, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 5 நீர்த்தேக்கங்களில் 2, வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று என்ற அடிப்படையில் இதுவரையில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் இன்னும் நிரம்பி வழிவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
