2 மில்லியன் 'சிம்'கள் பதிவின்றிப் பாவனையில், தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு
10 months ago
இரண்டு மில்லியன் சிம் அட்டைகள் முறையான அடையாளங்கள் இன்றி பாவனையில் உள்ளன. இதனால் சில குற்றச் சம்பவங்களைக் கண்டறிவதில் பிரச்சினை எழுகிறது என்று தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் சிம் அட்டை களைப் பெற்றுக்கொள்ளும் போது அடையாள அட்டைகள் கோரப்படவில்லை.
புதிய சட்டத்தின்படி சிம் அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு அடையாள அட்டை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
அதனடிப்படையில், 2018 ஆம் ஆண்டுக்கு முன்னர் முறையான அடையாளங்கள் இன்றி பெறப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் சிம் அட் டைகள் தற்போது பாவனையில் உள்ளன. இது சில குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிப்பதில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
