யாழ்.குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
3 months ago

யாழ்.குருநகர் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவர் நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த அல்போன்சோ சந்தியாப்பிள்ளை (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு மீனவர்கள் நேற்று முன்தினம் கடற்றொழிலுக்கு சென்ற நிலையில், ஒரு மீனவருக்கு நேற்று உடல் சுகயீனம் ஏற்பட்டது.
அவரை ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
