
டொரன்ரோவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு கடும் பனிப்பொழிவு நிலைமை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
டொரன்டோ பெரும்பாக பகுதியின் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 இற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் இந்த வார இறுதியில் பதிவாகி இருந்தன என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று 4 முதல் 8 சென்ரி மீற்றர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருந்தது.
கனடிய சுற்றாடல் திணைக்களத்தினால் இது தொடர்பில் பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு பனிப்புயல் தாக்கங்கள் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பனிப்பொழிவினை அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
