20 நாடுகளின் தூதரகங்களில் இலங்கை தூதுவர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களில் இலங்கை தூதுவர்கள் நியமிக்கப்படாமல் வெற்றிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிரந்தர தூதுக் குழு, பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், பிரேசில் மற்றும் 20 நாடுகளின் தூதுவர்கள் நாட்டுக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் அந்த நாடுகளுக்கான தூதுவர்கள் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் நிரந்தர தூதுக்குழு, பிரிட்டன், இந்தியா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கும் செயற்பாடு மந்தகதியில் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் காரணமாக பதில் தூதர்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, இலங்கைக்காக சுமார் 60 தூதரகங்கள் மற்றும் வெளிநாடுகளின் துணைத் தூதரக பொது அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்றில் ஒரு பகுதிக்கு உயர் அதிகாரிகள் இல்லாமை நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
