யோஷித ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்

3 months ago



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்.

கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள அரச காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று முன்னிலையாகுமாறு யோஷித ராஜபக்ஷவுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் அவர் குறித்த திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதனையடுத்து, அவர் இன்று நண்பகல் 12 மணியளவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்.

அண்மைய பதிவுகள்