வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1,500 பொலிஸார், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

வவுனியாவில் ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 1,500 பொலிஸார் கடமையில் ஈடுப டுத்தப்பட்டுள்ளதுடன் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுக ளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதி பர் பி.எ.சரத்சந்திர தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப் பட்டுள்ளன.
அத்துடன் தேர்தல் தினத்தில் நடந்துகொள்ளவேண்டிய முறைமைகள் தொடர்பாக வேட்பாளர்களின் முகவர்கள், பொலிஸார் தேர்தல் கண்கா ணிப்பாளர்கள், ஊடகவியலா ளர்கள் உட்பட ஏனைய தரப்புக் களுக்கு தெளிவு படுத்தப்பட் டுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட் டுள்ளதுடன் 12 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக் கப்பட்டுள்ளது.
வாக்கெண் ணும் மத்திய நிலையமாக வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி செயற்படவுள்ளதுடன் அதற்கான உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதைவேளை தேர்தல் கட மைகளுக்காக 1500 இற்கும் மேற்ப்பட்ட பொலிஸார் வவுனியா மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடு பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன-என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
