கிழக்கு மாகாண ஆளுநர் பிரச்சினைக்குத் தீர்வை விரைவுபடுத்த, திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று மக்கள் தினத்தை நடத்தினார்.

2 months ago



கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர பொது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுச் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இன்று (21) மக்கள் தினத்தை நடத்தினார்.

இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்நாயக்க, திருகோணமலை மாவட்டச் செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமார, கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள் மற்றும் பிற பொறுப்பான நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பொறுப்பான அதிகாரிகளிடம் தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட அதேவேளை ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோரிடமும் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.