ஹெல்மட் திருடப்பட்டமைக்கு எதிராக அநுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் போராட்டம்!
8 months ago

அநுராதபுரம் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவொன்று நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்தது.
இதனால், அநுராதபுரம் முதல் காங் கேசன்துறை வரையான ரயில் சேவைகள் நேற்று பாதிக்கப்பட்டன.
ரயில் நிலையத்துக்குச் சொந்தமான வாகன தரிப்பிடத்தில் ரயில்வே கட்டுப்பாட்டாளரின் மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசம் அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரயில் நிலையத்தில் உரிய பாதுகாப்பு இல்லாதமையே இத்திருட்டுச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவித்து ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டாளர்கள் குழுவினரால் போராட்டம் முன்னெ டுக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக அநுராதபுரத்திலிருந்து கிளிநொச்சி வரையான பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
