
யாழ்.வடமராட்சி துன்னாலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக் கையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவில் பொலிஸாரும் இராணுவத்தினரும் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.
இதன்போதே 17 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் திறந்த பிடியாணைகள், பிடியாணைகள், கசிப்பு விற்பனை போன்ற குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
கைதானவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
