இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்." என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்தி யாகவும் சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்." என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்துப் பேசினார். பின்னர் சிங்கப்பூர் பிரதமருடனான உயர்மட்டக் குழுவுடன் பேச்சு மேற்கொண்டார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில்
எனக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தலைமையின்
கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும். சிங்கப்பூர் வெறும் நாடு மட்டும் இல்லை. வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் சிங்கப்பூர் உள்ளது. இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க உருவாக்க மோடி விருப்பம் மேற்கொண்டார். அப்போது பிரதமர் நாங்கள் விரும்புகிறோம்.
இதற்காக மோடி பேசுகையில், இரு தரப்புகளும் இணைந்து பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.” என்றார். சிங்கப்பூர் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் இந்தியா - சிங்கப்பூர் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. டிஜிட்டல் தொழில் நுட்பம், தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
