இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு, அதிகாரப் பகிர்வு.-- அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் மனோகணேசன் எம்.பி. கலந்துரையாடல்
3 months ago

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரம், அதிகாரப் பகிர்வு விடயம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் எம்.பி. கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது என்று மனோகணேசன் எம்பியின் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நகர்வு, அதிகாரப் பகிர்வு, மலையக பெருந்தோட்டக் காணி உரிமை, சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள், சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று மனோகணேசன் எம்.பி. ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
