குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது கனடா அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது.

கனடா மக்கள் வேறு நாடுகளில் குழந்தையைப் பெற்றால், முதல் தலைமுறை குழந்தைக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இரண்டாவது தலை முறை குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது கனடா அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கான சட்டமூலம் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கனடாவின் குடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டில் குழந்தையை பெற்றெடுத்தாலும், அக்குழந்தைக்கு கனடாவின் குடியுரிமை கிடைக்கும்.
ஆனால், இந்த குழந்தை கனடாவின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் வளர்ந்து திருமணமாகி, வெளிநாட்டில் குழந்தையை பெற்றால், அதாவது இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு கனடா குடியுரிமையை கோர முடியாது என்று சட்டம் இருந்தது.
இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது இந்த சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அதன்படி இனி எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் கனடாவின் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த சட்டத்திருத்தம் கனடா நாடாளுமன்றத்தில் முன்மொழிப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்திற்கு இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்த மக்களும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்
அண்மைய பதிவுகள்

வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட இரு துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிஸாரால் மீட்பு

யாழ்.புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தண்டித்ததால், மாணவன் கிருமிநாசினியை அருந்தியுள்ளான்

மன்னாரில் மரணத்துக்கு நீதி கோரி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்கள் சார்பாக முன்னின்று போராடியவர்கள் மூவர் இன்று பொலிஸாரால் கைது
