யாழ்.இளவாலையில் சிறுமி ஒருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது
3 months ago

சிறுமியொருவரை அனுப்பி பிறிதொரு சிறுமியிடமிருந்து தங்கச் சங்கிலியை அபகரித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை - உயரப்புலம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலியைக் காணாததையடுத்து, அவரின் குடும்பத்தினர் அது தொடர்பில் வினவியுள்ளனர்.
இதன்போதே, பிறிதொரு சிறுமி அந்தச் சங்கிலியைப் பெற்றுச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மற்றைய சிறுமியை அழைத்து விசாரித்தபோது அவர், தனது தாயாரின் அறிவுறுத்தலுக்கு அமையவே இவ்வாறு செயற்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இளவாலைப் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட் டுக்கு அமைய சந்தேகநபரான தாய் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
