இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 27, 31,நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வமான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 27, 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகபூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்ரோபர் 30, நவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
குறித்த திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
