பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு
5 months ago

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்துக்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தையும் அறிவித்துள்ளது.
அதன்படி, தாமரை கோபுரம் டிசெம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும் எனவும் டிசெம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
