பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு
3 months ago

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கொழும்பு தாமரை கோபுரத்தை இயக்கும் நேரத்தை நீடிக்க அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலத்துக்கான நீட்டிக்கப்பட்ட இயக்க நேரத்தையும் அறிவித்துள்ளது.
அதன்படி, தாமரை கோபுரம் டிசெம்பர் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை பொது மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும் எனவும் டிசெம்பர் 27 ஆம் திகதி காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசெம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதியன்று காலை 9 மணி முதல் ஜனவரி 2 ஆம் திகதி மதியம் ஒரு மணி வரை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
