போலி விசாக்களில் கட்டாருக்கு செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
7 months ago

சேர்பிய நாட்டுப் போலி விசாக்களை பயன்படுத்தி கட்டாருக்கு தப்பிச்செல்ல முற்பட்ட 8 பங்களாதேஷ் பிரஜைகள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டார் நோக்கிச் செல்லவிருந்த விமானத்தில் ஏறுவதற்கு முற்பட்டபோதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், சேர்பியாவுக்கு செல்வதற்காக நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் 6 பங்களாதேஷ் பிரஜைகள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழுவினரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
