தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புக்களைத் தடை செய்து விசேட வர்த்தமானி வெளியீடு

1 month ago



தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புக்களைத் தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட செயற்பாடுகளுக்கு நிதியளித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அமைப்புக்களின் நிதி மற்றும் பொருளாதாரச் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.

மேலும், பயங்கரவாதத்துடன் தொடர் புடைய 222 நபர்களின் பெயர் பட்டியலையும் அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.