என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.








இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக் கான சிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சை நிலையம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஸ் பத்திரனவால் எதிர்வரும் கிழமை வைபவ ரீதியாக குறித்த சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
இலங்கையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் மகரகம வைத்தியசாலை மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை ஆகிய இரண்டில் மாத்திரம் காணப் படுகின்றது.
இது இலங்கையின் மூன்றாவது நிலையமாக பதிவு பெறுகின்றது.
இவ்வாறான சிகிச்சையை தனியார் வைத்தியசாலைகள் அல்லது இந்தியா போன்ற வெளிநாடுகளில் பெறுவதாயின் பல மில்லியன் செலவீனம் ஏற்படும்.
இந்த சிகிச்சை மிகவும் சிக்கலான விடயங்களை கொண்டுள்ளது. ஆகவே மாதம் ஒன்றில் இருவருக்கு மாத்திரம் சிகிச்சை செய்யமுடியும்.
சுகாதார அமைச்சின் வழிகாட்டு தலின் அடிப்படை யில் வைத்திய நிபுணர்களின் கடுமையான முயற்சி யில் பல சிரமங்களுக்கு மத்தியில் சிகிச்சை நிலையம் ஆரம்பிக்ச பட்டுள்ளது என அவர் தெரி வித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
