வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
6 months ago

வவுனியாவில் சுகவீனமடைந்த நிலையில் மீட்கப்பட்ட காட்டு யானைக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா குடாகச்சக் கொடி வயல் வெளியில் சுகவீனம் காரணமாக வீழ்ந்து கிடந்த யானை ஒன்று வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் அண்மையில் மீட்கப்பட்டது.
இதற்கு கடந்த ஐந்து நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு் வரும் நிலையில் அதன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எட்டு வயது மதிக்கத்தக்க குறித்த யானை, மோசமான காலநிலை காரணமாக வயலில் தவறி விழுந்ததாக வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கூறினர்.
இதேவேளை, வன ஜீவராசிகள் திணைக்களத்தின் வட மாகாணத்துக்கு பொறுப்பான கால்நடை வைத்திய அதிகாரி பா. கிரிதரனின் தலைமையில் குறித்த யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
