
ஐஸ் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான நுழைவாயிலில் சிறைச்சாலை அவசர பதில் தந்திரோபாயப் படை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியை பரிசோதித்த போது, அவரிடம் ஐஸ் என சந்தேகிக்கப்படும் சில போதைப்பொருள் பொதிகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றை அந்த அதிகாரி தனது பணி காலணியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான காமினி பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர் சுமார் 20 வருடங்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
