இலங்கை ஜனாதிபதியை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

8 months ago


ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்திய பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார அமைச்சர்                   சு. ஜெய்சங்கர் இந்தியப் பிரதமரின் அழைப்பை ஜனாதிபதி அநுரவுக்கு விடுத்தார்.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்கு முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று அறிய வருகின்றது.