கிளிநொச்சியில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வியாழன் ஆர்ப்பாட்டப் பேரணி.
5 months ago

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்த மதுபானசாலைகளுக்கு எதிரான கண்டனப் போராட்டமும் பேரணியும் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி டிப்போ சந்தியில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு 362 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும், 174 சில்லறை மதுபான விற்பனை நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழிருந்த நிதி அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டன என்று அண்மையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்ட வாரியாக கிளிநொச்சிக்கே அதிகமான மதுபானசாலைக்கான (16) அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
