









யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 15 ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமானது.
இந்த வர்த்தகக் கண்காட்சி நாளை (25) மற்றும் நாளை மறுதினம் (26) ஆகிய தினங்களிலும் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்ப நிகழ்வுகள் நடைபெற்று விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டு வர்த்தக கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் தலைவர் வாசுதேவன் ராசையா, யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் நிர்வாக இயக்குனர் கே.விக்னேஷ், அனுசரணையாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
