இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்பைப் பேண தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவிப்பு
3 months ago

இலங்கையுடன் மிக நெருங்கிய உயர்மட்டத் தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
சீனாவும். இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும்.
இரு நாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உயர் மட்டத் தொடர்புண்டு.
அத்தகைய உயர்மட்டத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியத் தொடர்புகளை முன்கொண்டு செல்வதற்கும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் சீனா தயாராக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
