
தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள அமைச்சர்களுள் 15 வைத்தியர்கள், 16 சட்டத்தரணிகள் மற்றும் மூன்று பொறியியலாளர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 50 இற்கும் அதிகமான கல்வியாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, அதிகளவிலான தொழில் தகுதியுடைய கல்வியாளர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதேவேளை, நான்கு பேராசிரியர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளதாக கட்சி தெரிவிக்கின்றது.
ஹினிதும சுனில் செனெவி, சேன நாணயக்கார, சந்தன அபேரத்ன மற்றும் எல். எம் அபேவிக்கிரம அந்த பேராசிரியர்கள் ஆவர்.
மேலும், இராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரிகள், அரச நிறுவனங்களில் முன்னாள் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல தொழில் வல்லுநர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர்.
எவ்வாறாயினும், இம்முறை தெரிவாகியுள்ள பாராளுமன்றம் கல்விமான்களால் நிரம்பியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
