யாழ்.நல்லூர் அலங்காரக் கந்தனின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது

2 months ago



வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.நல்லூர் அலங்காரக் கந்தனின் தைப்பூச திருமஞ்ச உற்சவம் இன்று மாலை பக்திபூர்வமாக இடம்பெற்றது..

கருவரையில் அருள் பாலித்து விளங்கும் அலங்கார வேல்கந்தனுக்கு விஷேட, அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று பின் வசந்த மண்டபத்தில் நல்லூர் அலங்கார கந்தனுக்கு,வள்ளி, தெய்வானைக்கு தைப்பூச உற்சவ கிரியைகள் இடம்பெற்று வசந்த மண்டத்தில் இருந்து எழுந்தருளிய எம் பெருமான்,சமேதராக உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் திருமஞ்சத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ் உற்சவ கிரியைகளை தேவஸ்தான பிரதம குரு ம.வைகுந்தகுருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்தி வைத்தனர்.

இங்கு பல பகாங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்ட அருட்கடாச்சங்களை பெற்றுச் சென்றனர்.


அண்மைய பதிவுகள்