ஆலயங்களில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள அரசு தீர்மானித்ததாக வெளியான தகவலை பாதுகாப்பு அமைச்சு நிராகரிப்பு
7 months ago

ஆலயங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
ஆலயங்கள், வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினரை விலக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை என்று அது குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை. இந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
