லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனானில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை விரைவில் அந்த நாட்டை விட்டு வெளியேற இங்கிலாந்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகின்றன. இந்த மோதலால் பதற்ற நிலை ஏற் பட்டுள்ளது. விரைவில் இந்த நிலை மோசமடையக்கூடும். அயல்நாட்டு அலுவலகத் தூதரசு குழுக்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். ஆனால், இந்த மோதல் தீவிரமானால், நாங்கள் அனைவரையும் உடனடியாக வெளியேற்ற முடியாமல் போகும் இக்கட்டான சூழல் உருவாகலாம்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அரசு சார்பில் நாங்கள் எந்த உத்தரவாதமும் வழங்க முடியாது. நிலைமை மோசமானால், மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வலியுறுத்தப்படலாம்.
இதனால் லெபனானில் உள்ள இங்கிலாந்து மக்கள் அங்கிருந்து வெளியேறிவிடுங்கள் என்பதே எங்களின் எளிமையான தகவல் என்று இங்கிலாந்து வெளிவிவகார செயலாளர் டேவிட் லேமி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
