தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் கொள்கை ரீதியாக ஒன்றுபடுவது தவிர்க்க முடியாதது.-- வேட்பாளர் தவராசா தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் கொள்கை ரீதியாக ஒன்றுபடுவது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் ஜனநாய தமிழ் அரசு கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் கே. வி. தவராசா.
தென்னிலங்கை கட்சிகளும் அரசியல்வாதிகளும் தங்களின் நிகழ்ச்சி நிரல்களை தமிழர் பகுதிகளில் மிகநிதானமாக நகர்த்தி வருகின்றனர்.
அவர்களுக்கு வசைபாடுவதற்கும் அவர்களுடன் சேர்ந்து தமிழர்களின் வரலாறுகளை திரிபுபடுத்த துணை போவதற்கும் ஒரு கூட்டம் இருக்கின்றது.
எமது மக்கள் காலம் காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர்களாக இருந்து வருகின்றனர்.
இந்தத் துயரநிலை தொடர்ந்தும் நீடிக்கமுடியாது.
ஆகவே நாம் அனைவரும் குறைகூறுபவர்களாக இருக்காமல் எமது மக்களின் குறைகளையும் வேதனைகளையும் எப்படித் தீர்க்கலாம் என்பது பற்றி நிதானமாக முடிவெடுக்க வேண்டியவர்களாக மாறவேண்டும்.
இன்று நாம் அனைவரும் ஓர் இக்கட்டான காலகட்டத்தில் இருக்கின்றோம்.
எங்களுடைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றுமையின்மை என்பது எமது மக்களுக்கான மிகப்பெரும் சாபக்கேடாக மாறியிருக்கின்றது.
இந்தக் கொடிய நிலை ஆட்சியாளர்களுக்கும் தென்னிலங்கை பேரினவாத கட்சிகளுக்கும் ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
எனவே, தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் கட்சி ரீதியாக இல்லாவிட்டாலும் கொள்கை ரீதியாக ஒன்றுபடுவது தவிர்க்க முடியாததொன்றாகும்.
ஆகவே, இங்கு நான் முக்கியமாகக்கூற முற்படுவது.
சில தமிழ்த் தேசியக் கட்சிகள் காணி, பொலிஸ் அதிகாரம் உள்ளிட்ட மாகாண சபை முறைமையை ஏற்கத் தயார் என்கின்றனர்.
சில தமிழ்த் தேசியக் கட்சிகள் சமஷ்டிதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்கின்றனர்.
இதுதான் எங்களிடம் உள்ள வேற்றுமை.
இதிலிருந்து நாம் விடுபடுகின்ற பட்சத்தில்தான் எம் இனத்துக்கான விடுதலை சாத்தியமாகும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
