
எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்குத் தீர்மானித்துள்ளமையை வரவேற்பதாகவும், இதன்மூலம் தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைக ளையும், கோரிக்கைகளையும் ஜன நாயக முறையில் உலகறியச் செய்வதுடன் சர்வதேசமயப்படுத்த முடியும் என நம்புவதாகவும் 5 புலம்பெயர் தமிழர் அமைப்புகள் கூட்டாகத் தெரிவித் துள்ளன.
தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில், இதுகுறித்து தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி உலகத் தமிழ் அமைப்புகளின் பேரவை, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, இலங்கைத் தமிழ்ச்சங்கம், ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத்தமிழ் அமைப்பு ஆகிய 5 புலம் பெயர் தமிழர் அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
