இலங்கையில் 8 வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை தடைப்பட்டது.-- சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவிப்பு


அரசாங்க வைத்தியசாலையில் காணப்படும் மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையால் இலங்கையில் 8 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் கதிரியக்க பரிசோதனை சேவைகள் தடைப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தில் துணை மருத்துவ சேவைக்கு தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வது இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக சிரி ஸ்கானர் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கானர் உள்ளிட்ட பல பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதன் செயலாளர் சானக தர்மவிக்ரம சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போது சேவையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அதிகளவில் பணிச் சுமையை சுமக்க வேண்டியுள்ளதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே, இந்த சேவைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு உட னடியாக ஆட்சேர்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இல்லாவிட்டால், அடுத்த சில மாதங்களில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதார சேவை கடுமையாக பாதிக்கப்படும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
