மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்- போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார்.

போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்கவேண்டும்- இவ்வாறு போப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்தார்.
ஆசிய பசிபிக் நாடுகளில் போப் பிரான்சிஸ் 12 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது சுற்றுப் பயணத்தின் மூன்றாவது நாளில் இந் தோனேஷியா சென்ற அவர், தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்கு சென்றார். அங்கு மசூதியின் இமாம் ஆன நசுருதீன் உமர் போப் பிரான்சிஸை வரவேற்றார்.
அங்கு இந்தோனேஷிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மதங்களைச் சேர்ந்த (புத்த மதம், இஸ்லாம், இந்து மதம், கத்தோலிக்க மதம், புரோட்டஸ்டன்ட் மதம், கன் பூசிய மதம்) தலைவர்களும் இருந்தனர்.
போப் பிரான்சிஸை வரவேற்றுப் பேசிய நசுருதீன் தனது உரையில் புவிவெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட பிரச்னைகளை மேற்கோள் காட்டினார்.
இதன் பிறகு பேசிய போப் பிரான்சிஸ் "நாம் அனைவரும் சகோதரர்கள், யாத்திரிகர்கள். அனைவரும் கடவுளை நோக்கிச் செல்லும் வழியில், வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் முன்னேற வேண்டும். போர்கள் போன்ற மனிதகுலத்தின் எதிர்காலத்தை அச்சுறுத்தும் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டும் என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
