இலங்கையில் 58 பாதாள உலகக் குழுக்கள் அடையாளம், அதில் 1400 பேர் வரை உள்ளனர், 2025 இல் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்

இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் 58 பாதாளக் குழுக்கள் செயல்வடுவது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பதில் பொலிஸ்மா அதிபர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு கடந்த காலத்தில் அரசியல் ஆதரவு இருந்தது.
எனினும், தற்போது அரசியல் ஆதரவு இல்லாமல்போயுள்ளது.
நாட்டில் 58 பாதாள உலகக் குழுக்களை நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்தக் குழுக்களில் 1400 பேர் வரை உள்ளனர்.
இந்தக் குழுக்களின் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனனர்.
2024ஆம் ஆண்டில் 75 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 18 வாள்வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
2025ஆம் ஆண்டில் இதுவரையான காலப் பகுதியில் 17 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், 5 வாள்வெட்டுச் சம்பவங்கள் என மொத்தம் 22 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன." - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
