

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அறியமுடிகின்றது.
இதன்படி மீள்குடியேற விரும்புவோருக்கான வசதிகளை அரசு செய்து கொடுக்கும் என்று தெரிகின்றது.
1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எவ்வளவு சிங்களவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்ற விவரங்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தால் திரட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
ஆளுங் கட்சியின் மேலிட உத்தரவொன்றின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என்று தெரிகின்றது.
வடக்கின் காணிகள் வெளியாரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தான சர்ச்சைகள் நீண்டகாலம் நிலவி வரும் நிலையில், இங்கு சிங்களக் மீள்குடியேற்றங்களுக்கு அரசு தயாராகி வருவது தமிழர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
