
இலங்கை பாராளுமன்ற தேர்தலில் 1 இலட்சம் ரூபா மட்டுமே செலவிட்டு எம்.பியான பெண் சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க.
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி ஈட்டுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டதாக, இம்முறை பாராளுமன்ற தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு தெரிவான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இதற்கு முன்னர் செயல்பாட்டு அரசியலில் பங்கேற்றது கிடையாது. பிரதேச சபை ஒன்றைக்கூட நான் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது.
மக்களுக்காக நான் பாராளுமன்றம் செல்கிறேன். இது மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி.
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் எப்பொழுதும் எதிர்பார்த்ததே கிடையாது.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலுக்காக நான் தனிப்பட்ட ரீதியில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே செலவிட்டேன்.
எனது அரசாங்கம் மக்களுக்கு சேவைகளை செய்யத் தவறினால் கடந்த அரசாங்கங்களை விட வேகமாக மக்கள் எம்மை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கப் பெறும் சிறப்புரிமைகளில் அதிகார பூர்வ இல்லம் ஒன்று எனக்கு தேவைப்படும்.
அதற்காக விசேடமாக கோரிக்கைகள் எதையும் தாம் விடுக்கவில்லை - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
