
அமெரிக்கா உணவு பொருள்களை புறக்கணிக்குமாறு கனடிய நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்கா அரசாங்கம் கனடிய ஏற்றுமதிகளுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு விடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடிய நுகர்வோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அமெரிக்கா உணவு பொருள்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள் ஒரு தடவைக்கு இரண்டு தடவை அவற்றை கொள்வனவு செய்வது குறித்து யோசிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு உணவு பண்டங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு அவற்றை புறக்கணிக்குமாறு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் முதலாக திகதி தொடக்கம் கனடிய ஏற்றுமதிகள் மீது 25 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
எவ்வாறெனினும், அமெரிக்க உற்பத்திகளை அடையாளம் கண்டு அவற்றை புறக்கணிப்பது என்பது பல்வேறு நடைமுறை சிக்கல்களை கொண்ட செயல்முறை என துறை சார்ந்த நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
