இந்தியாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வருகின்றது. இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட் டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு இங்கு வருகிறது. இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் இந்தக் குழு வில் உள்ளனர்.
அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என் பதை மதிப்பாய்வு செய்யும் வகையிலும் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தக் குழுவின் வருகை வாய்ப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரி விக்கப்பட்டது.
இந்திய குழுவினர் நாட்டின் முக்கி யஸ்தர்களுடன் பேச்சுகளையும் நடத்துவர் என்று தெரிய வருகின்றது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
