வீதி விபத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்துக்குள்ளாகிய நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
குமாரபுரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி சிவானந்தன் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 9ஆம் திகதி வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஊற்றம்பலப் பிள்ளையார் கோவிலடி யில் அவர்மீது மோட்டார் சைக்கிள் மோதி காலில் படுகாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் வீட்டுக்கு செல்ல முடியாத அவர் வீதி ஓரமாக படுத்திருந்தார்.
மறுநாள் காலை, அவ்வீதியால் வந்த ஒருவர் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச்சென்று வீட்டில் சேர்த்துள்ளார்.
அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
