பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட் டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானித்ததாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்த நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தமது பணியை கைவிட்டதாக ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்த கருத்துக்கு எதிராக தொழிற்சங்கத்தின் நிறைவேற்றுச் சபை பணிப்புறக்கணிப்பை தொடர தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட் டுப்பாட்டாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிக்கு முன்னதாக அந்தந்த ரயில் நிலையத்திலோ அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்திலோ கடமைக்கு சமூ கமளிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யாத அனைத்து நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
