ஃபெங்கல் புயல், கனமழையால் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிப்பு
6 months ago



ஃபெங்கல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விமானங்கள் இயக்குவதில் சிரமம் காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இண்டிகோ விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சென்னைக்கு வந்து சேர வேண்டிய 12 விமானங்கள் இரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
விமான ஓடுபாதையில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
