
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி வட மாகாண ஆளுநராக யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார்.
தென் மாகாண ஆளுநராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநராக திஸ்ஸ வர்ணசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மத்திய ஆளுநராக திஸ்ஸ குமாரசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
