இலங்கையில் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு.-- கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதி
4 months ago

இலங்கையில் மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தர தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி. ரத்னகமகே உறுதியளித்துள்ளார்.
திருக்கோவில் பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட கடல்தொழில் பிரதி அமைச்சர் ரத்னகமகே அப்பிரதேசத்தில் வசிக்கும் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலின் போதே மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளுக்கு தீர்வினை அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இதன்போது விநாயகபுரம் மீனவர்களினால் மகஜர் ஒன்றும் கடல்தொழில் பிரதி அமைச்சர் ரி.ஜி.ரத்னகமகேவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
