யாழ்.குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் பகுதியில் மதுபோதையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகனை தாக்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறிகட்டுவான் பகுதியில், மது போதையில் கடமையில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது வீதியால் சென்ற நபரை மறித்து அவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதலை மேற்கொண்டார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமகன் ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் தாக்குதலை மேற்கொண்ட ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
