5 மில்லியன் டொலரை எனக்கு இலஞ்சம் வழங்க தொழிலதிபர் ஒருவர் முயன்றார்! சந்திரிகா வெளியிட்ட பரபரப்பு தகவல்

5 மில்லியன் டொலரை எனக்கு இலஞ்சம் வழங்க தொழிலதிபர் ஒருவர் முயன்றார்! சந்திரிகா வெளியிட்ட பரபரப்பு தகவல்
“நான் பிரதமராக இருந்த காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஒரு திட்டத்துக்காக எனக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக கொடுக்க முயன்றார்.” இவ்வாறு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
ஊழலுக்குப் பழக்கப்பட்ட பெரியவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை என இதன்போது தெரிவித்த அவர், சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்- எங்களிடம் ஒரு ஜனாதிபதி இருந்தார்.
அவர் உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள் என அவர் தனது அமைச்சரவையில் தெரிவித்தார்.
இதை அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களிடமும் கூறிவந்தார்.
எல்லோரும் திருடினார்கள். யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது.
தொழிலதிபர்கள் திட்டங்களைப் பாதுகாக்க இலஞ்சம் கொடுக்கலாம் என்றாலும், பரவலான ஊழல் இறுதியில் தேசிய வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
