தெற்கு நெடுஞ்சாலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து.-- சாரதி மரணம், 12 வெளிநாட்டவர் காயம்
3 months ago

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே நேற்று காலை ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த 12 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 30 பேர் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
