தெற்கு நெடுஞ்சாலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து.-- சாரதி மரணம், 12 வெளிநாட்டவர் காயம்
4 months ago

இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை நோக்கிச் செல்லும் பாதையில், 138ஆவது தூண் அருகே நேற்று காலை ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று அதே திசையில் பயணித்த சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பஸ்ஸில் பயணித்த 12 வெளிநாட்டவர்கள் காயமடைந்த நிலையில் தங்காலை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ்ஸில் ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணிகள் 30 பேர் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
